பதிவு செய்த நாள்
11 பிப்2013
01:28
சென்னை:மகளிர் சுய உதவி குழு இயக்கம் வாயிலாக, கடந்த, 20 ஆண்டுகளாக, பெண்கள் அடைந்த முன்னேற்றம் தொடர்பான அறிக்கை தயாரிக்க, 10 லட்ச ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
திட்டம் விரிவானது:பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதியத்தின் உதவிஉடன், 1991ல், தர்மபுரி மாவட்டத்தில் சிறிய அளவில் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன. 1995ல், மகளிர் திட்டமாக விரிவானது.தமிழகத்தில், 5.56 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களில், 85.70 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை, அரசு, ஆண்டுதோறும் செயல்படுத்துகிறது.சுய தொழில் செய்ய கடனுதவி, குழுக்களாக இணைந்து தொழில்களை மேற்கொள்ளுதல், கண்காட்சிகளில் அரங்குகளை அமைத்தல் என, பல்வேறு நடவடிக்கை மூலம், பெண்கள் வருவாய் ஈட்டுகின்றனர்.
மகளிர் சுய உதவி குழுக்களில் இணைந்த பெண்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துஉள்ளனரா, கிராமப்புற பெண்களிடம் மகளிர் திட்டம் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், எழுத்தறிவு பெற்றுள்ள பெண்கள் சதவீதம் என, பல்வேறு தலைப்புகளில், அறிக்கை தயார் செய்யப்படுகிறது.எப்போது?சுய உதவிக் குழுக்களின், 20 ஆண்டு கால வரலாற்றை தொகுக்கும் இந்த அறிக்கையை தயாரிக்க, அர, 10 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த அறிக்கை, விரைவில் வெளியாகும்' என, தமிழக மகளிர் நல மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|