பதிவு செய்த நாள்
16 பிப்2013
15:04
ஸ்கோடா பினான்ஸ் பிரைவேட் லிமிடெட் தற்பொழுது சுலப மாதத் தவணையாக ரூ.8999 செலுத்தி ஸ்கோடா ராபிட் கார் வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர் சுலப மாதத் தவணையில் மிகச் சிறந்த, விசாலமான இடவசதிக் கொண்ட பிரீமியம் செடான் காரான ஸ்கோடா ராபிட்டை பெற முடியும். போக்ஸ்வேகனின் பினான்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பிராண்டட் ஆன ஸ்கோடா பினான்ஸ், ஸ்கோடா ராபிட்டின் 3 மாடல்களுக்கு இத்திட்டத்தை வழங்குகிறது. ராபிட் ஆக்டிவ் பிளஸ் TDI மாடலுக்கு (ஆன் ரோடு விலை ரூ.9,84,495) ரூ.4,45,556 டவுன் பேமண்ட்டாகவும் மீதித் தொகையை ரூ.8999 வீதம் 48 மாதங்களுக்கு சுலபத் தவணையாகவும் நிர்ணயித்துள்ளது. இதே போல் ராபிட் ஆம்பிஷன் பிளஸ் TDI மாடலுக்கு (ரூ.10,55,875-ஆன்ரோட் விலை) ரூ.5,16,936 டவுன் பேமண்ட்டாகவும் மீதித் தொகையை ரூ.8999 வீதம் 48 மாதங்களுக்கு சுலபத் தவணையாகவும் வழங்குகிறது. மேலும் ராபிட் எலிகன்ஸ் பிளஸ் TDI மாடலுக்கு (ரூ.11,41,281-ஆன் ரோடு விலை) ரூ.6,02,342 டவுன் பேமண்ட்டாகவும் மீதித்தொகையை ரூ.8999 வீதம் 48 மாதங்களுக்கு ”சுலபத்தவணையாகவும் வழங்குகிறது. போக்ஸ்வேகன் குழுமத்தின் ஒரு பகுதியான ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் மஹாராஷ்ட்ராவின் அவுரங்கபாத் அருகேயுள்ள ஷேந்திரா என்ற இடத்தில் தனது நவீனமயமான கார் உற்பத்தி நிறுவனத்தைக் கொண்டுள்ளது. ஸ்கோடா ஆட்டோ இந்தியா ஸ்கோடா சூப்பர்ப், ஸ்கோடா லாரா, ஸ்கோடா பேபியா, ஸ்கோடா யெட்டி மற்றும் ஸ்கோடா ராபிட் என்ற 5 மாடல்களை 106 அவுட்லெட்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. 2001 நவம்பரில் துவங்கி இதுவரை 1,68,204 வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|