பதிவு செய்த நாள்
22 பிப்2013
09:12
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.37 புள்ளிகள் அதிகரித்து 19466.73 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.65 புள்ளிகள் குறைந்து 5829.60 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று மிகவும் மோசமாக இருந்தது. சர்வதேச அளவில், வர்த்தகம் சுணக்கம் கண்டதையடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', கடந்த, 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 1.62 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.அமெரிக்க பெடரல் வங்கி, அதன் கடன் பத்திரங்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இந்தியா உள்ளிட்ட, ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில், உலோகம், வங்கி, ரியல் எஸ்டேட், பொறியியல் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் வீழ்ச்சி கண்டன. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|