பதிவு செய்த நாள்
25 பிப்2013
00:44
புதுடில்லி:மருத்துவ காப்பீடு திட்டங்களில் ஆட்களைச் சேர்க்க, ஆயுள் மற்றும் பொது காப்பீடு முகவர்களுக்கும், நிபந்தனைஅற்ற அனுமதி வழங்கப்பட் டு உள்ளது.நாடு முழுவதும் மருத்துவ காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிக அளவில் காப்பீட்டுதாரர்களை ஈர்க்கவும், இத்தகை நடவடிக்கையை காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) எடுத்துள்ளது.
பயிற்சி:நாட்டில், மருத்துவக் காப்பீட்டுக்கென்று பிரத்யேகமாக இயங்கும் நிறுவனங்கள், முகவர்களுக்கு, 25 மணி நேர பயிற்சி அளித்து, அவர்கள் மூலம், பல்வேறு மருத்துவ காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்து வருகின்றன.இந்நிறுவனங்கள், அவற்றின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை, ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு முகவர்கள் மூலம் விற்பனை செய்ய விரும்பினால், அவர்களை ஒருங்கிணைந்த முகவர்கள் என்ற பிரிவிற்கு மாற்ற வேண்டும். இதையடுத்து, வழங்கப்படும் "ஐ.சி. - 34' என்ற சான்றிதழ் இருந்தால் தான், ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு முகவர்கள், பிரத்யேக மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் சார்பாக முகவராக பணியாற்ற முடியும்.
இத்தகைய சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறை, சிக்கலாக உள்ளதாகக் கூறப்படுகிறது."எனவே, மருத்துவ காப்பீட்டு துறையிலும் ஈடுபட ஆர்வமாக உள்ள ஆயுள் காப்பீட்டு முகவர்களுக்கு, கட்டாயம் "ஐ.சி. - 34' சான்றிதழ் தேவை என்ற விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது' என, "இரிடா' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு :இதன் மூலம், பிரத்யேக மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள், அதிக அளவில் காப்பீட்டுதாரர்களை ஈர்க்கும் நோக்கில், ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு முகவர்களையும் பயன்படுத்திக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ், அப்பல்லோ முனிச் ஹெல்த் இன்சூரன்ஸ், மேக்ஸ் பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள், மருத்துவத்திற்காக மட்டும் பிரத்யேகமாக காப்பீடுகளை வழங்கி வருகின்றன."இரிடா'வின் அறிவிப்பால், இந்த மூன்று நிறுவனங்கள் பயன் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, ஆயுள் காப்பீட்டு முகவர்கள் வாயிலாக, சிறு நகரங்களிலும், மருத்துவ காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|