பதிவு செய்த நாள்
25 பிப்2013
00:48
புதுடில்லி:இந்திய திராட்சைக்கு, ஐரோப்பிய நாடுகளில், அதிக தேவை காணப்படுவதால், நடப்பாண்டில், இதன் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என,"அபெடா' அமைப்பு தெரிவித்துள்ளது.உள்நாட்டில், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், திராட்சை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்திய திராட்சை ஏற்றுமதிக்கு, ஐரோப்பிய நாடுகள், வங்கதேசம், நேபாளம், இங்கிலாந்து, ”வீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகள் முக்கிய சந்தைகளாகத் திகழ்கின்றன.கடந்த 2010-11ம் ஆண்டில், 602 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.08 லட்சம் டன் திராட்சை ஏற்றுமதி செய்யப்பட்டது.
நடப்பாண்டில், இதுவரையிலுமாக, திராட்சை ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 3,755 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், 1,906 டன் என்ற அளவில் இருந்தது.நடப்பாண்டில், இதுவரையிலுமாக, நெதர்லாந்து நாட்டிற்கான திராட்சை ஏற்றுமதி, 1,764 டன் என்ற அளவில் உள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து (1,302 டன்), சுவீடன் (508 டன்) ஆகிய நாடுகளுக்கு திராட்சை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், ஏற்றுமதிக்கான ஒரு கிலோ திராட்சையின் விலை, 40 - 45 ரூபாய் என்ற அளவில் இருந்தது. நடப்பாண்டில், இதன் விலை கிலோவுக்கு, 15-20 ரூபாய் வரை அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|