பதிவு செய்த நாள்
25 பிப்2013
00:49
கோல்கட்டா:கடந்த மூன்று ஆண்டுகளில், உள்நாட்டில், மரபு சாரா மின் உற்பத்தி திறன், கூடுதலாக, 10,431 மெகா வாட் அதிகரித்துள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட, இலக்கான, 9,623 மெகா வாட்டை விட அதிகம் என, மத்திய மரபுசாரா மின் துறை அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். காற்றாலை, தாவர கழிவு, சூரிய மின்சக்தி, உள்ளிட்ட, மரபு சாரா மின் உற்பத்தி திட்டங்களை ஊக்குவிக்க, அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
தற்போது, நாட்டின் மரபு சாரா மின் உற்பத்தி திறன், 26,920 மெகாவாட் ஆக உள்ளது. நடப்பு நிதியாண்டில், கூடுதலாக, 4,125 மெகா வாட் அளவிற்கு, மின் உற்பத்தி திறனை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், சென்ற ஜனவரி வரை, 2,005 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், மரபு சாரா மின் உற்பத்தி திறன் அதிகரிப்பில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம், கூடுதலாக, 3,113 மெகா வாட் அளவிற்கு, மின் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளது. இதையடுத்து, குஜராத் (2,389 மெகா வாட்), ராஜஸ்தான் (1,930 மெகா வாட்), மகாராஷ்டிரா (1,699 மெகா வாட்), கர்நாடகா (1,394 மெகா வாட்), ஆந்திரா (408 மெகா வாட்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|