பதிவு செய்த நாள்
27 பிப்2013
10:20
சரக்கு ரயில்களில், நிலக்கரியை ஒரு இடத்தில்இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான கட்டணம், 5.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள தால், மின் கட்டணம் அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்டில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும், நிலக்கரிக்கான சரக்கு கட்டணம், டன் ஒன்றுக்கு, 685 ரூபாயிலிருந்து, 724 ரூபாயாக, 5.79 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான, நர்சிங் ராவ் கூறியதாவது: நிலக்கரி மீதான சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், இந்திய நிலக்கரி நிறுவனம் உட்பட, நிலக்கரி துறைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. இந்த கட்டண உயர்வை, மின் உற்பத்தி நிலையங்கள் தான் ஏற்க நேரிடும். அதனால், மின் கட்டணம் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன; அனேகமாக, ஒரு சதவீதம் வரை கட்டணம் உயரலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|