பதிவு செய்த நாள்
01 மார்2013
09:10
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் ( 09.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.05 புள்ளிகள் குறைந்து 18861.49 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.55 புள்ளிகள் அதிகரித்து 5701.60 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், வரும் 2013 - 14ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பார்லிமென்டில் தாக்கல் செய்தார். இதில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி'யின் செயல்பாடு மிக சிறப்பாக உள்ளதாகவும், இவ்வாண்டில், வெள்ளி விழா கொண்டாடும் அதற்கு கூடுதல் அதிகாரம் வழங்க உள்ளதாகவும், நிதி அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்தியாவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்களுக்கு, தேய்மானம் போக, 15 சதவீத முதலீட்டு சலுகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இத் துறையை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சற்று அதிகரித்திருந்தது. இருப்பினும், பங்குவர்த்தகம் முடியும் போது, இத்துறையைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை, 3.39 சதவீதம் சரிவடைந்தன.ஒட்டு மொத்த அளவில், மத்திய பட்ஜெட், சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என்ற நிலைப்பாட்டால், பங்குச் சந்தைகளில், மதியத்திற்கு பிறகான வர்த்தகம் சரிவைக் கண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|