நாட்டின் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும்நாட்டின் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2013
09:10

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக ‌நேர தொடக்கத்தின் ( 09.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.05 புள்ளிகள் குறைந்து 18861.49 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.55 புள்ளிகள் அதிகரித்து 5701.60 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், வரும் 2013 - 14ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பார்லிமென்டில் தாக்கல் செய்தார். இதில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி'யின் செயல்பாடு மிக சிறப்பாக உள்ளதாகவும், இவ்வாண்டில், வெள்ளி விழா கொண்டாடும் அதற்கு கூடுதல் அதிகாரம் வழங்க உள்ளதாகவும், நிதி அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்தியாவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்களுக்கு, தேய்மானம் போக, 15 சதவீத முதலீட்டு சலுகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இத் துறையை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சற்று அதிகரித்திருந்தது. இருப்பினும், பங்குவர்த்தகம் முடியும் போது, இத்துறையைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை, 3.39 சதவீதம் சரிவடைந்தன.ஒட்டு மொத்த அளவில், மத்திய பட்ஜெட், சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என்ற நிலைப்பாட்டால், பங்குச் சந்தைகளில், மதியத்திற்கு பிறகான வர்த்தகம் சரிவைக் கண்டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)