பதிவு செய்த நாள்
02 மார்2013
00:17
புதுடில்லி:கடந்த, 2012ம் ஆண்டில், நாட்டின், கம்ப்யூட்டர் விற்பனை, 1.10 கோடியாக அதிகரித்துள்ளது என, ஐ.டி.சி., ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற சூழ்நிலைகளிலும், இந்தியாவில், கம்ப்யூட்டர் பயன்பாடு சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு, கல்லூரி மாணவர்களுக்கு, இலவசமாக லேப்-டாப் கம்ப்யூட்டர்களை வழங்கி வருகிறது. இதுவும், கம்ப்யூட்டர் விற்பனை வளர்ச்சிக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது.கடந்த, 2012ம் ஆண்டில், இந்தியாவின், கம்ப்யூட்டர் விற்பனை, 1.10 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய, 2011ம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட விற்பனையை விட, 3.5 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு காலத்தில், விற்பனையான மொத்த கம்ப்யூட்டரில், லெனோவா நிறுவனம், 15.9 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, எச்.பி., (15.2 சதவீதம்), ஏசர் (13.2 சதவீதம்), டெல் (13 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|