பதிவு செய்த நாள்
02 மார்2013
00:19
புதுடில்லி:வரும், 2013-14ம் நிதியாண்டில், இந்திய ரயில்வே துறை, அதன் விரிவாக்க திட்டங்களுக்காக, 15,103 கோடி ரூபாயை திரட்ட உள்ளது. அடுத்த நிதியாண்டில், இந்திய ரயில்வே, அதன் விரிவாக்க திட்டங்களுக்கென, முன் எப்போதும் இல்லாத வகையில், 63,363 கோடி ரூபாயை செலவிடத் திட்டமிட்டுள்ளது. இதற்கான, பகுதி நிதியான, 15,013 கோடி ரூபாயை, இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.எப்.சி.,), வெளிச் சந்தையிலிருந்து திரட்டுகிறது. நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், ரயில்வே துறை, ஐ.ஆர்.எப்.சி., மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாயை வெளிச் சந்தையிலிருந்து திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால் பிப்ரவரி, 15ம் தேதி வரையிலுமாக, 8,150 கோடி ரூபாய் அளவிற்கே நிதி திரட்டப்பட்டு உள்ளது.இதில், வரி விலக்கு கடன்பத்திரங்கள் வாயிலாக, 6,500 கோடி ரூபாயும் மற்றும் வர்த்தக கடன்கள் மூலம், 1,650 கோடி ரூபாயும் திரட்டப்பட்டு உள்ளது. குறித்த கால கடன் மற்றும் வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக, எஞ்சியுள்ள, 6,850 கோடி ரூபாய் திரட்டப்படும் என, ஐ.ஆர்.எப்.சி., நிர்வாக இயக்குனர் ராஜிவ் தத் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|