பதிவு செய்த நாள்
03 மார்2013
00:26
புதுடில்லி:நடப்பு மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் உர மானியச் செலவு, 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறையின் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா, ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில், உர மானியச் செலவினம், 66 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, மத்திய அரசு, மதிப்பீடு செய்திருந்தது. இதையடுத்து, 65,592.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், உர மானியத்திற்கான செலவினம் அதிகரித்ததையடுத்து, இதற்கான மானியம், 1.03 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.தற்போது, நாட்டின் யூரியா பயன்பாடு, ஆண்டுக்கு சராசரியாக, 3 கோடி டன் என்ற அளவிலும், டை-அமோனியம் பாஸ்பேட் (டீ.ஏ.பி), முரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.,) மற்றும் கலப்பின உரங்களுக்கான பயன்பாடு, 2.50-2.60 கோடி டன்னாகவும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|