பதிவு செய்த நாள்
07 மார்2013
00:49

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், புதன் கிழமையன்றும் நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததால், சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை வாங்கினர்.
இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. அமெரிக்காவில் சேவை துறை வளர்ச்சி மேம்பட்டுள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அதிகரித்து காணப்பட்டது. மேலும், ஐரோப்பிய சந்தைகளிலும் பங்கு வியாபாரம், கடந்த, நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, உயர்வுடன் முடிவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம், தகவல் தொழில் நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.இருப்பினும், நுகர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 109.44 புள்ளிகள் அதிகரித்து, 19,252.61 புள்ளிகளில், நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,293.39 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,195.47 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, டாட்டா மோட்டார்ஸ், எல் அண்டு டி உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், மகிந்திரா, இந்துஸ்தான் யூனிலிவர், மாருதி உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 34.35 புள்ளிகள் உயர்ந்து, 5,818.60 புள்ளிகளில் நிலை பெற்றது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,828.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,795.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|