பதிவு செய்த நாள்
08 மார்2013
09:16

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85.96 புள்ளிகள் அதிகரித்து 19499.50 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 18.55 புள்ளிகள் குறைந்து 5881.85 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிலவரங்களை கருத்தில் கொண்டு, சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை வாங்கினர். இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 0.84 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், மந்தமாகவே நடைபெற்றது. நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், பொதுத் துறை, நுகர்வோர் சாதனங்கள், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|