பதிவு செய்த நாள்
12 மார்2013
01:46
புதுடில்லி:கடந்த ஜனவரியில், பல்வேறு நிறுவனங்கள், 8,308 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்ப பெற்றுள்ளன. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சாதனையாகும்.கையகப்படுத்துதல்:பங்குச் சந்தை பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தை, வேறொரு நிறுவனம் கையகப்படுத்தும்போது, அதன் பெரும்பான்மை பங்குகளை வாங்கும் நோக்குடன், பங்குகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பது வழக்கம்.
இது தவிர, நிறுவனர்கள், தங்கள் நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள விரும்பினாலும், பொதுமக்களிடம் இருந்து பங்குகளை திரும்ப பெறுவதாக அறிவிக்கலாம்.இந்தவகையில்,சென்ற ஜனவரியில், 11 நிறுவனங்கள், 8,308 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற்றுள்ளன. கடந்த 2007ம் ஆண்டு, ஏப்ரலில், 10 நிறுவனங்கள், 17,646 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற்றன என்பது, குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு மாதத்தில், எட்டு நிறுவனங்கள், 7,209 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற்று உள்ளன. நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ், மூன்று நிறுவனங்கள், 1,099 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன.
திரும்பபெற்றவை:நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், பங்குகளை திரும்ப பெறும் திட்டத்தின் கீழ், 69 நிறுவனங்கள் 11,755 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, பொதுமக்களிடம் இருந்து திரும்ப பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|