பதிவு செய்த நாள்
14 மார்2013
01:01
புதுடில்லி:விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும், ஏர்-இந்தியா நிறுவனம், அதிரடி கட்டண குறைப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
பயணம் மேற்கொள்வதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பாக, (60 நாட்கள்) முன்பதிவு செய்து கொள்ளும், விமான பயணிகளுக்கு, இந்த அதிரடி சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, டில்லி - மும்பை நகரங்களுக்கிடையிலான விமான பயணக் கட்டணம், 3,981 ரூபாயாக இருக்கும். இதே போன்று, 2,566 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில், டில்லி - லக்னோ ஆகிய நகரங்களுக்கிடையில் பறக்கலாம்.
மே மாத மத்தியிலிருந்து பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை, பயண முகவர்கள் மற்றும் ஏர்-இந்தியா இணைய தளத்தில், தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம்.போட்டியை எதிர்கொள்ளும் விதமாக, அண்மை காலமாக, ஏர்-ஏசியா உள்ளிட்ட பல்வேறு விமான சேவை நிறுவனங்கள், பயணிகளுக்கு, கட்டண சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|