பதிவு செய்த நாள்
14 மார்2013
01:10
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமை அன்றும் மிகவும் மோசமாக இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமற்ற நிலையில், லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில், பங்குகளை விற்பனை செய்தனர்.
இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 1.03 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.மேலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்பொருட்கள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 202.37 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,362.55 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,511.97 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,338.52 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சன்பார்மா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 62.90 புள்ளிகள் சரிவடைந்து, 5,851.20 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,893.85 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,842.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|