ஊட்டி தேயிலை விற்பனையை உயர்த்த புதிய திட்டம்ஊட்டி தேயிலை விற்பனையை உயர்த்த புதிய திட்டம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அஞ்சலக சிறு சேமிப்பு திட்டம்: வட்டி குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2013
01:14

புதுடில்லி:வரும் ஏப்ரலில் துவங்கும் 2013-14ம் நிதிஆண்டில், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று தெரிகிறது. புதிய வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, மத்திய நிதி அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சியாமளா கோபிநாத் தலைமையிலான குழு, தேசிய சிறு சேமிப்பு நிதியம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.இதன்படி, அரசு கடன் பத்திர முதலீடுகளில், ஓராண்டு சராசரி வருவாயின் அடிப்படையில், அதே முதிர்வு காலம் கொண்ட தேசிய சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும்.
இந்நிலையில், சென்ற 2012ம் ஆண்டில், ஐந்தாண்டு முதிர்வு காலம் கொண்ட அரசு கடன் பத்திரங்களின் மீதான ஆண்டு சராசரி வருவாய், 8.51 சதவீதத்தில் இருந்து, 8.41 சதவீதமாக குறைந்துள்ளது. அதுபோன்று, 10 ஆண்டு முதிர்வு காலத்தை கொண்ட அரசு கடன் பத்திரங்களின் மீதான ஆண்டு சராசரி வருவாய், 8.51 சதவீதத்தில் இருந்து, 8.45 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
இவற்றின் அடிப்படையில் கணக்கிட்டால், வரும் நிதியாண்டில், அஞ்சலக சேமிப்பு திட்ட முதலீடுகளுக்கு வட்டி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, ஐந்து மற்றும் பத்தாண்டு முதிர்வு காலம் கொண்ட, தேசிய சேமிப்பு பத்திர முதலீடுகளுக்கு, வட்டி விகிதம், முறையே, 8.6 மற்றும் 8.9 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொது சேம நல நிதிய முதலீடுகளுக்கான வட்டி விகிதம், 8.8 சதவீதமாக உள்ளது.மத்திய அரசு, வரும் நிதியாண்டில், பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் மூலம், 5,800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி குழு பரிந்துரைப்படி வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டால், திட்டமிட்ட முதலீட்டு இலக்கை எட்டுவது சிரமம் என, நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)