பதிவு செய்த நாள்
14 மார்2013
10:08
மும்பை : கடந்த மூன்று நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று வாரத்தின் நான்காவது நாளில் ஏற்றத்துடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 46.29 புள்ளிகள் உயர்ந்து 19,408.84 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 11.55 புள்ளிகள் உயர்ந்து 5,862.75 எனும் அளவிலும் காணப்பட்டது. அமெரிக்க பங்குசந்தையில் காணப்பட்ட முன்னேற்றம் மற்றும் இன்று வெளியாக இருக்கும் பணவீக்கம் போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் இந்திய பங்குசந்தைகள் உயர்ந்து காணப்பட்டன. இந்திய பங்குசந்தைகள் போன்று ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 0.76 சதவீதம் உயர்ந்தும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.32 சதவீதம் சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|