பதிவு செய்த நாள்
18 மார்2013
00:14
புதுடில்லி:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), வேளாண் துறையின் பங்களிப்பு, நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், 13.7 சதவீதமாக சரிவடையும் என, மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் தாரிக் அன்வர் தெரிவித்தார்.நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் துறை சாராத, இதர துறைகளின் பங்களிப்பு வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் காரணமாகவே, வேளாண் துறையின் பங்களிப்பு குறைந்து வருகிறது.
கடந்த, 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் ஜி.டீ.பி.,யில் வேளாண் துறையின் பங்களிப்பு, 14.6 சதவீதமாக இருந்தது. இது, 2010-11ம் நிதியாண்டில், 14.5 சதவீதமாகவும், 2011-12ம் நிதியாண்டில், 14.1 சதவீதமாகவும் குறைந்தது.இது, நடப்பு நிதியாண்டில், 13.7 சதவீதமாகக் குறையும் என, மத்திய புள்ளியியல் துறையின் முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த, 2011-12ம் பருவத்தில், நாட்டின் ஒட்டு மொத்த தானிய உற்பத்தி, 25.90 கோடி டன்னாக இருந்தது. இந்நிலையில், நாட்டின் பல மாநிலங்களில், காலம் தவறிய மழைப்பொழிவு மற்றும் வறட்சியால், நடப்பு, 2012-13ம் பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி, 25 கோடி டன்னாகக் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு, "கிழக்கு மாநிலங்களில் பசுமை புரட்சி' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இதைஅடுத்து, அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில், நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கடந்த, 2009-10ம் பருவத்தில், மேற்கண்ட மாநிலங்களில் நெல் உற்பத்தி, 4.56 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு வேளாண் பருவத்தில் (2012-13), 5.56 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய அரசின், மேற்கண்ட பசுமை புரட்சி திட்டத்தால், கடந்த மூன்று ஆண்டுகளில், நெல் உற்பத்தி, 1 கோடி டன் அதிகரித்துள்ளது என, அமைச்சர் தாரிக் அன்வர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|