விவசாய கடன்கள் தள்ளுபடி திட்டம்: வங்கிகளுக்கு மத்திய அரசு கண்டிப்புவிவசாய கடன்கள் தள்ளுபடி திட்டம்: வங்கிகளுக்கு மத்திய அரசு கண்டிப்பு ... "தமிழகத்தின் முந்திரி உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ' "தமிழகத்தின் முந்திரி உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ' ...
மொத்த உள்நாட்டு உற்பத்தியில்வேளாண் துறை பங்களிப்பு குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2013
00:14

புதுடில்லி:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), வேளாண் துறையின் பங்களிப்பு, நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், 13.7 சதவீதமாக சரிவடையும் என, மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் தாரிக் அன்வர் தெரிவித்தார்.நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் துறை சாராத, இதர துறைகளின் பங்களிப்பு வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் காரணமாகவே, வேளாண் துறையின் பங்களிப்பு குறைந்து வருகிறது.

கடந்த, 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் ஜி.டீ.பி.,யில் வேளாண் துறையின் பங்களிப்பு, 14.6 சதவீதமாக இருந்தது. இது, 2010-11ம் நிதியாண்டில், 14.5 சதவீதமாகவும், 2011-12ம் நிதியாண்டில், 14.1 சதவீதமாகவும் குறைந்தது.இது, நடப்பு நிதியாண்டில், 13.7 சதவீதமாகக் குறையும் என, மத்திய புள்ளியியல் துறையின் முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த, 2011-12ம் பருவத்தில், நாட்டின் ஒட்டு மொத்த தானிய உற்பத்தி, 25.90 கோடி டன்னாக இருந்தது. இந்நிலையில், நாட்டின் பல மாநிலங்களில், காலம் தவறிய மழைப்பொழிவு மற்றும் வறட்சியால், நடப்பு, 2012-13ம் பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி, 25 கோடி டன்னாகக் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு, "கிழக்கு மாநிலங்களில் பசுமை புரட்சி' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இதைஅடுத்து, அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில், நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.

கடந்த, 2009-10ம் பருவத்தில், மேற்கண்ட மாநிலங்களில் நெல் உற்பத்தி, 4.56 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு வேளாண் பருவத்தில் (2012-13), 5.56 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய அரசின், மேற்கண்ட பசுமை புரட்சி திட்டத்தால், கடந்த மூன்று ஆண்டுகளில், நெல் உற்பத்தி, 1 கோடி டன் அதிகரித்துள்ளது என, அமைச்சர் தாரிக் அன்வர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)