சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது வர்த்தகம்சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது வர்த்தகம் ... பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி5,600 கோடி டாலராக சரிவடையும் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி5,600 கோடி டாலராக சரிவடையும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
அரசின் கையிருப்பில் இருந்து 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2013
23:11

புதுடில்லி: மத்திய அரசின் கையிருப்பிலிருந்து, இது வரை, 25.58 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்தார்.நடப்பாண்டு ஜூன் 30ம் தேதிக்குள், மத்திய அரசின் கையிருப்பில் உபரியாக உள்ள கோதுமையிலிருந்து, 45 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், மார்ச் 12ம் தேதி வரையில், 25.58 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதியாகியுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பொது உரிம அடிப்படையில், கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதத்தில், மத்திய அரசின் சேமிப்பு கிடங்குகளில், தேங்கி கிடக்கும் உபரி கோதுமையை ஏற்றுமதி செய்யும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அரசுத் துறை நிறுவனங்களான, எம்.எம்.டி.சி., எஸ்.டீ.சி., மற்றும் பி.இ.சி., ஆகிய நிறுவனங்கள் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதலில், 45 லட்சம் டன் கோதுமையை, இரண்டு கட்டங்களாக ஏற்றுமதி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்நிலையில், அண்மையில், மத்திய அரசு, இந்திய உணவுக் கழக கிடங்குகளிலிருந்து, தனியார் நிறுவனங்கள், 50 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.அதிக விளைச்சலால், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் சேமிப்பு கிடங்குகளில், அதிகளவில் கோதுமை கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அறுவடையாகி, கொள்முதல் செய்யப்படும் கோதுமையை இருப்பு வைக்கும் வகையில், கையிருப்பில் உள்ள கோதுமை அளவை குறைக்கும் வகையிலேயே, கூடுதல் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மேலும் கூறினார்.


Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)