பதிவு செய்த நாள்
18 மார்2013
23:11
புதுடில்லி: மத்திய அரசின் கையிருப்பிலிருந்து, இது வரை, 25.58 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்தார்.நடப்பாண்டு ஜூன் 30ம் தேதிக்குள், மத்திய அரசின் கையிருப்பில் உபரியாக உள்ள கோதுமையிலிருந்து, 45 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், மார்ச் 12ம் தேதி வரையில், 25.58 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதியாகியுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பொது உரிம அடிப்படையில், கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதத்தில், மத்திய அரசின் சேமிப்பு கிடங்குகளில், தேங்கி கிடக்கும் உபரி கோதுமையை ஏற்றுமதி செய்யும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அரசுத் துறை நிறுவனங்களான, எம்.எம்.டி.சி., எஸ்.டீ.சி., மற்றும் பி.இ.சி., ஆகிய நிறுவனங்கள் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதலில், 45 லட்சம் டன் கோதுமையை, இரண்டு கட்டங்களாக ஏற்றுமதி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்நிலையில், அண்மையில், மத்திய அரசு, இந்திய உணவுக் கழக கிடங்குகளிலிருந்து, தனியார் நிறுவனங்கள், 50 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.அதிக விளைச்சலால், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் சேமிப்பு கிடங்குகளில், அதிகளவில் கோதுமை கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அறுவடையாகி, கொள்முதல் செய்யப்படும் கோதுமையை இருப்பு வைக்கும் வகையில், கையிருப்பில் உள்ள கோதுமை அளவை குறைக்கும் வகையிலேயே, கூடுதல் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|