பதிவு செய்த நாள்
21 மார்2013
01:00
புதுடில்லி:நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், 215 கோடி டாலராக (11,825 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, சென்ற 2012ம் ஆண்டு, இதே மாதத்தில், 200 கோடி டாலராக (11 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு மாதங்களாக, சரிவடைந்து வந்த அன்னிய நேரடி முதலீடு, சென்ற ஜனவரியில், 8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, 39 சதவீதம் சரிவடைந்து, 1,910 கோடி டாலராக (1.05 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3,128 கோடி டாலராக (1.72 லட்சம் கோடி ரூபாய்) மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, மத்திய தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல், 10 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டில், சேவை துறை, 466 கோடி டாலரை ஈர்த்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஓட்டல் மற்றும் சுற்றுலா துறை (319 கோடி டாலர்), உலோகவியல் துறை (138 கோடி டாலர்), கட்டுமான துறை ( 120 கோடி டாலர்), மருந்து துறை (100 கோடி டாலர்) ஆகியவை உள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், நாட்டில் அதிகளவில் அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொண்டதில், மொரீஷியஸ் (817 கோடி டாலர்) முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, ஜப்பான் (169 கோடி டாலர்), சிங்கப்பூர் (182 கோடி டாலர்), நெதர்லாந்து (151 கோடி டாலர்) மற்றும் இங்கிலாந்து (104 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|