அரசின் பொருளாதார  சீர்திருத்தம் தொடரும்: ப.சிதம்பரம்அரசின் பொருளாதார சீர்திருத்தம் தொடரும்: ப.சிதம்பரம் ... இயற்கை ரப்பர் இறக்குமதி 9,497 டன்னாக குறைந்தது இயற்கை ரப்பர் இறக்குமதி 9,497 டன்னாக குறைந்தது ...
அன்னிய நேரடி முதலீடு215 கோடி டாலராக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
01:00

புதுடில்லி:நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், 215 கோடி டாலராக (11,825 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, சென்ற 2012ம் ஆண்டு, இதே மாதத்தில், 200 கோடி டாலராக (11 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு மாதங்களாக, சரிவடைந்து வந்த அன்னிய நேரடி முதலீடு, சென்ற ஜனவரியில், 8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, 39 சதவீதம் சரிவடைந்து, 1,910 கோடி டாலராக (1.05 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3,128 கோடி டாலராக (1.72 லட்சம் கோடி ரூபாய்) மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, மத்திய தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல், 10 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டில், சேவை துறை, 466 கோடி டாலரை ஈர்த்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஓட்டல் மற்றும் சுற்றுலா துறை (319 கோடி டாலர்), உலோகவியல் துறை (138 கோடி டாலர்), கட்டுமான துறை ( 120 கோடி டாலர்), மருந்து துறை (100 கோடி டாலர்) ஆகியவை உள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், நாட்டில் அதிகளவில் அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொண்டதில், மொரீஷியஸ் (817 கோடி டாலர்) முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, ஜப்பான் (169 கோடி டாலர்), சிங்கப்பூர் (182 கோடி டாலர்), நெதர்லாந்து (151 கோடி டாலர்) மற்றும் இங்கிலாந்து (104 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)