பதிவு செய்த நாள்
25 மார்2013
01:20
புதுடில்லி:சென்ற, 2011-12ம் நிதியாண்டில், உள்நாட்டில் பொருட்களை, நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்யும் துறையின் விற்றுமுதல், 6,385 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய, 2010-11ம் நிதியாண்டில், 5,229 கோடி ரூபாயாக இருந்தது என, இந்திய நேரடி விற்பனையாளர்கள் கூட்டமைப்பு (ஐ.டீ.எஸ்.ஏ.,) தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள மக்களிடையே, உடல் நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்புகள் பெருகி வருகின்றன.இதை பிரதிபலிக்கும் வகையில், சென்ற நிதியாண்டில், நேரடி விற்பனை துறை, 22 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்த மூன்று நிதி ஆண்டுகளிலும், இதே நிலை தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், நேரடி விற்பனை துறை சார்ந்த வினியோகஸ்தர்களின் எண்ணிக்கை, 50 லட்சத்தை எட்டியுள்ளது என, ஐ.டீ.எஸ்.ஏ., தலைவர் எஸ். சுப்ரமணியன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|