பதிவு செய்த நாள்
25 மார்2013
01:25
புதுடில்லி:அலைபேசி சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும், "ரிங் டோன்' பாடல்கள் மூலம், கடந்த மூன்று ஆண்டுகளில், 8,185 கோடி ரூபாய் வருவாய்
ஈட்டியுள்ளன.அலைபேசி சந்தாதாரர்கள், பாரம்பரியமான "ட்ரிங்... ட்ரிங்...' ஒலிக்கு பதிலாக, தங்களுக்கு பிடித்தமான பாடல்களை, "ரிங் டோன்' ஆக, வைத்துக் கொள்வது அதிகரித்து வருகிறது.கட்டணம்:அலைபேசியில் அழைப்பவருக்கு, குறிப்பிட்ட பாடல் அல்லது இசை மூலம், தமது மனோபாவத்தை வெளிப்படுத்த, "ரிங் டோன்' உதவுகிறது. இந்த உபரி சேவைக்காக, அலைபேசி சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நாளொன்றுக்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன.
ஒரு வாடிக்கையாளரிடம், ஒரு மாதம் வசூலிக்கும், 30 ரூபாயை, அலைபேசி சேவை நிறுவனங்களும், இசை வெளியீட்டு நிறுவனமும், குறிப்பிட்ட சதவீதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.
கடந்த, 2004ம் ஆண்டு, இத்தகைய சேவையை துவக்கியவற்றுள், முதலாவதாக உள்ள ஐடியா செலுலார் நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளில், "ரிங் டோன்' வாயிலாக மட்டும், 2,877 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.இதே காலத்தில், இச்சேவை மூலம், பார்தி ஏர்டெல் நிறுவனம், 2,088 கோடி ரூபாய் திரட்டி, இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது. மூன்றாவது இடத்தில், வோடபோன் நிறுவனம் (1,521 கோடி ரூபாய்) உள்ளது.
பொதுத் துறையை சேர்ந்த பீ.எஸ்.என்.எல்., நிறுவனம், 689 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, நான்காவது இடத்தை பிடித்து உள்ளது.
விருப்ப தேர்வு:அடுத்த இடங்களில், டாட்டா டெலிசர்வீசஸ் (407 கோடி ரூபாய்), ஏர்செல் (203 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.கடந்த, 2011ம் ஆண்டு வெளியான, "கொலவெறி' பாடல், அலைபேசி சந்தாதாரர்களின் விருப்பமான, "ரிங் டோன்' தேர்வாக இருந்தது. கடந்த, 2012ம் ஆண்டு, "கங்னம்' நடனம் உலகளவில் பிரபலமாகி, அதன் இசை வடிவம், கோடிக்கணக்கான அலைபேசிகளில் அழைப்பு பாடலாக இடம் பெற்றது.
இதையடுத்து, தற்போது, ஏராளமான பாடகர்கள், இசையமைப்பாளர்கள் தங்கள் இசைத் தொகுப்பை ஆன்-லைனில் வெளியிட்டு வருகின்றனர். இவை பிரபலமாகும் பட்சத்தில், அலைபேசி "ரிங் டோன்' ஆக உருமாறி, இத்துறை நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாயை ஈட்டித் தரும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
புதுமை:"ரிங் டோன்' சேவையில், உபரி வருவாயை கண்டு வரும் பல நிறுவனங்கள், அதில் பல்வேறு புதுமைகளை புகுத்தி, வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.உதாரணமாக, டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம், அலைபேசியில் ஒருவரை அழைக்கும்போது, விருப்பமற்ற எதிர் தரப்பு "ரிங் டோனை' கேட்பதற்கு பதிலாக, நமது விருப்பமான இசையை நாமே கேட்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, மூன்று நபர்களின் எண்களை தொடர்பு கொள்ளும் போது, நமக்கு விருப்பமான மூன்று வெவ்வேறு பாடல்களை "ரிங் டோன்' ஆக வைத்துக் கொள்ளும் வசதியை டாட்டா டெலிசர்வீசஸ் வழங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|