பதிவு செய்த நாள்
26 மார்2013
09:17
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்க நேர தொடக்கத்தின் (9.04 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31.76 புள்ளிகள் அதிகரித்து 18713.18 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 60.55 புள்ளிகள் குறைந்து 5573.30 புள்ளிகளோடு காணப்பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்கதினமான நேற்று அதிக, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தனர். இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவாக,"சென்செக்ஸ்' குறியீட்டு எண் சரிவுடன் முடிவடைந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. இருப்பினும், இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கவில்லை.நேற்றைய வர்த்தகத்தில், பொறியியல், உலோகம், வங்கி, மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|