பதிவு செய்த நாள்
27 மார்2013
01:18
புதுடில்லி:நாட்டின் மக்காச்சோளம் ஏற்றுமதி, ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ள சந்தைப்படுத்தும் பருவத்தில், 3035 லட்சம் டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த சந்தைப் படுத்தும் பருவத்தில், இதன் ஏற்றுமதி, 48 லட்சம் டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
மகாராஷ்டிரா:மக்காச்சோளம், அதிகளவில் உற்பத்தியாகும், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், காலம் தவறிய பருவமழை மற்றும் வறட்சியால், இதன் உற்பத்தி குறையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.நடப்பு 201213ம் பருவத்தில், உள்நாட்டில், மக்காச்சோளம் உற்பத்தி, 210 லட்சம் டன்னாக இருக்குமென எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த பருவத்தில், இதன் உற்பத்தி, 216 லட்சம் டன்னாக இருந்தது. உள் நாட்டில், இதற்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனாலும், இதன் ஏற்றுமதி குறையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
கர்நாடகா:நாட்டின் ஒட்டு மொத்த மக்காச்சோளம் உற்பத்தியில், கர்நாடக மாநிலத்தின் பங்களிப்பு அதிகமாகும். இதைத் தொடர்ந்து, ஆந்திரா (18 சதவீதம்), மகாராஷ்டிரா (12 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. மேற்கண்ட மாநிலங்கள் தவிர, பீகார் மாநிலத்திலும், மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதன் உற்பத்தியில், இந்தமாநிலத்தின் பங்களிப்பு, 7 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
தூரக்கிழக்கு நாடுகள் :இந்தியாவிலிருந்து, மக்காச்சோளம் தூரக் கிழக்கு நாடுகளுக்கே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நாடுகளில், மக்காச்சோளம், கால்நடைத் தீவனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டிலிருந்து, மக்காச்சோளம் ஏற்றுமதி, ஜூலை மாதத்துடன் நிறைவடையும். அதன்பிறகு, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து, இதன் ஏற்றுமதி அதிகரிக்கத் துவங்கும்.
அமெரிக்கா:நடப்பு 2013ம் ஆண்டில், அமெரிக்காவில், கடந்த 77 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மக்காச் சோளம் சாகுபடி, 9.78 கோடி ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மூன்று ஆண்டுகளில், நாட்டின் மக்காச்சோளம் ஏற்றுமதி இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 200910ம் ஆண்டில், மக்காச்சோளம் ஏற்றுமதி, 19 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த 201112ம் ஆண்டில், 48 லட்சம் டன்னாக அதிகரித்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|