பதிவு செய்த நாள்
27 மார்2013
01:21
புதுடில்லி:சர்வதேச சந்தையில், டை அமோனியம் பாஸ்பேட் (டீ.ஏ.பி.,) மற்றும் முரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.,) உரங்களின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், வரும் 201314ம் நிதியாண்டிற்கு, இவ்வகை உரங்களுக்கான மானியத்தை, மத்திய அரசு குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, ஒரு டன் டீ.ஏ.பி.,க்கான மானியம், 2,000 ரூபாய் வரை குறைக்கப்பட்டு, 12,350 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோன்று, ஒரு டன் எம்.ஓ.பி., விலை, 2,700 வரை குறைக்கப் பட்டு, 11,700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது என, உர அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.
நடப்பு 201213ம் நிதியாண்டில், ஒரு டன் டீ.ஏ.பி., உரத்திற்கு 14,350 ரூபாயும், எம்.ஓ.பி.,க்கு 14 ஆயிரம் ரூபாயும் மானியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டில், முறையே 19,783 ரூபாய் மற்றும் 16,054 ரூபாயாக இருந்தது.சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில், உள்நாட்டில் உர மானியம் நிர்ணியக்கப்படுகிறது. தற்போது, உலகளவில், உரங்களின் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், அரசு உர மானியத்தை குறைக்கும் என, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|