பதிவு செய்த நாள்
30 மார்2013
01:20
புதுடில்லி:இந்தியாவின் வெளிநாட்டு கடன், சென்ற 2012ம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலத்தில், 8.9 சதவீதம் அதிகரித்து, 37,630 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 16.7 சதவீதம் உயர்ந்து, 20,60,904 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்தியாவின் வெளிநாட்டு கடன், 20.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, 2012ம் ஆண்டு, மார்ச் மாதம் வரையிலான காலத்தில், 19.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், இந்தியாவின் நீண்ட கால அடிப்படையிலான கடன், 6.4 சதவீதம் உயர்ந்து, 28,440 கோடி டாலராக (15.64 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இதே போன்று, குறுகிய கால கடனும், 17.5 சதவீதம் அதிகரித்து, 9,190 கோடி டாலராக (5.05 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டு மொத்த வெளிநாட்டு கடனில், நீண்ட கால அடிப்படையிலான கடனின் பங்களிப்பு, 75.6 சதவீதம் என்ற அளவிலும், குறுகிய கால அடிப்படையிலான கடனின் பங்களிப்பு, 24.4 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.நீண்ட கால அடிப்படையிலான மொத்த கடனில், வெளிநாட்டு வர்த்தக கடன் (30 சதவீதம்), என்.ஆர்.ஐ., டெபாசிட் (18 சதவீதம்) மற்றும் பல்வகை கடன்கள் (13.7 சதவீதம்) ஆகியவற்றின் பங்களிப்பு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|