பதிவு செய்த நாள்
31 மார்2013
00:40
மும்பை,:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 105 கோடி டாலர் (5,775 கோடி ரூபாய்) அதிகரித்து, 29,336 கோடி டாலராக (16.13 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.இது, இதற்கு முந்தைய, 15ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 196 கோடி டாலர் (10,780 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,231 கோடி டாலராக (16.07 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 106 கோடி டாலர் (5,830 கோடி ரூபாய்) அதிகரித்து, 26,041 கோடி டாலராக (14.32 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. மேலும், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,629 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
அதேசமயம், சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள கையிருப்பு மற்றும் எஸ்.டீ.ஆர் மதிப்பு முறையே, 41 லட்சம் டாலர் மற்றும் 75 லட்சம் டாலர் சரிவடைந்து உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டுச் செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு உயர்ந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி, தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|