பதிவு செய்த நாள்
03 ஏப்2013
00:10
புதுடில்லி:பொதுத் துறையை சேர்ந்த, 17 வங்கி களின், டெபாசிட் செலவினம் அதிகரித்துள்ளதால், அவற்றின் லாபம் குறைய வாய்ப்புள்ளது.
போட்டி:வங்கிகளிடையே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தி, அதிக அளவில், டெபாசிட்டை திரட்டுவதில் போட்டி நிலவுகிறது. இதற்காக, வங்கிகள், மிக அதிக தொகையை, சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர் களுக்கு, நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் வட்டியை வழங்குகின்றன. இத்தகைய செயல்பாடுகளால், வங்கிகளின் டெபாசிட் செலவினம் உயர்கிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த, 2012ம் ஆண்டு செப்., 26ம் தேதி, மத்திய நிதி அமைச்சகம், அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
அதில், ஒரு வங்கியின் மொத்த டெபாசிட்டில், அதிக செலவின டெபாசிட்டின் பங்களிப்பு, 15 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.அதிக செலவின டெபாசிட் பிரிவில், நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதலாக டெபாசிட் திரட்டி இருந்தால், அதை வங்கிகள் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும்,
அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், சென்ற 2012ம் ஆண்டு, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், பொதுத் துறையை சேர்ந்த ஏழு வங்கிகள் மட்டுமே, அரசு நிர்ணயித்ததை விட, குறைவாக, அதிக செலவின டெபாசிட்டுகளை திரட்டி உள்ளன.பொதுத் துறையை சேர்ந்த, 17 வங்கிகளின் மொத்த டெபாசிட்டில், அதிக செலவின டெபாசிட் பிரிவின் பங்களிப்பு, 15.31 சதவீதம் முதல், 36.10 சதவீதம் வரை உள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாகும்.
செலவினம்:ஐ.டீ.பீ.ஐ. பேங்க்-ன் சராசரி டெபாசிட் செலவினம், 8.49 சதவீதமாக உள்ளது. அது போன்று, பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க் (8.31 சதவீதம்), கார்ப்பரேஷன் பேங்க் (8.15 சதவீதம்), விஜயா பேங்க் (8.09 சதவீதம்) ஆகியவற்றின் சராசரி டெபாசிட் செலவினம், இதர வங்கிகளை விட, அதிகமாக உள்ளது.இதனால், 17 பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபத்தில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|