பதிவு செய்த நாள்
06 ஏப்2013
00:15
புதுடில்லி:நடப்பு 2013ம் ஆண்டின், ஜனவரி முதல் மார்ச் வரையிலான, மூன்று மாத காலத்தில், இந்தியா உள்ளிட்ட ஆசிய - பசிபிக் பிராந்தியங்களில், நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு, 23 சதவீதம் சரிவடைந்து, 6,450 கோடி டாலராக வீழ்ச்சி கண்டு உள்ளது.
இது, கடந்த 2012ம் ஆண்டின், இதே காலத்தில், 8,380 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், ஆசிய - பசிபிக் பிராந்தியங்களில் உள்ள நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளதாக, மெர்ஜ்மார்கெட் நிறுவனத்தின் ஆய்வுஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கீட்டு காலத்தில், ஆசிய - பசிபிக் பிராந்தியங்களில் (ஜப்பான் நீங்கலாக), மேற் கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் ஒப்பந்தங்களின் எண்ணிக்கை, 484 லிருந்து, 453 ஆக சரிவடைந்து உள்ளது. இதன் மதிப்பு, 6,450 கோடி டாலராகும்.இதில், எரிசக்தி, சுரங்கம் ஆகிய துறைகளின் பங்களிப்பு, 29.8 சதவீதம் (1,930 கோடி டாலர்) என்ற அளவில் உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், சீனா, 142 ஒப்பந்தங்கள் மூலம், 2,360 கோடி டாலர் மதிப்பிலான, இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலிடத்தில் உள்ளது.எனினும், இது, கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 26.3 சதவீதம் குறைவாகும் என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|