பதிவு செய்த நாள்
10 ஏப்2013
00:18
கொச்சி:சென்ற, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் முந்திரி ஏற்றுமதி, 10-15 சதவீதம் சரிவடையும் என, இந்திய முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (சி.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற, 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் முந்திரி ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 93,029 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 3,636 கோடி ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது.
முந்திரிக்கொட்டை:இது, இதற்கு முந்தைய, 2011-12ம் நிதியாண்டின் இதே காலத்தில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் முறையே, 1,21,578 டன் மற்றும் 4,017 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது என, சி.இ.பி.சி., புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சென்ற, 2011-12ம் நிதியாண்டில், முந்திரிக் கொட்டை ஏற்றுமதி, அளவுமற்றும் மதிப்பின் அடிப்படையில் முறையே, 1,31,760 டன் மற்றும் 4,391 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த, 2010-11ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, சென்ற, 2011-12ம் நிதியாண்டில், முந்திரி கொட்டை ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 24.6 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 56 சதவீதமும் சிறப்பாக வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முந்திரி பருப்பு பயன்பாட்டில், சர்வதேச அளவில், இந்தியா முன்னிலையில் உள்ளது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக, அளவின் அடிப்படையிலான, நம்நாட்டின் முந்திரி பயன்பாடு, 1,70,000 - 1,90,000 டன் என்ற அளவில் உள்ளது.இது தவிர, உலகளவில், முந்திரி கொட்டையை பதப்படுத்தி, ஏற்றுமதி செய்வதில், நம்நாடு முன்னணி நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது.டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால், சென்ற நிதியாண்டின் முதல், 11 மாதக் காலத்தில், ஏற்றுமதி செய்யப்பட்ட முந்திரியின் விலை, கிலோ ஒன்றுக்கு, 390.81 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 330.41 ரூபாயாக குறைந்து காணப்பட்டது.
வியட்நாம்:சர்வதேச அளவில், முந்திரிக்கான தேவை சுணக்கம் கண்டுள்ளது. இது தவிர, நம் நாட்டுடன் ஒப்பிடும் போது, வியட்நாம் போன்ற நாடுகள், மிக குறைந்த விலையில், உலக நாடுகளுக்கு முந்திரி ஏற்றுமதி செய்கின்றன.மேலும், உள்நாட்டிலும் முந்திரிக்கான தேவை, எதிர்பார்ப்பை விட, சரிவடைந்து உள்ளது. இது போன்ற காரணங்களால், இத்துறையில் ஈடுபட்டு வரும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்த கவுன்சிலின் தலைவர் ஹரி கிருஷ்ணன் ஆர். நாயர் தெரிவித்தார்.
மதிப்பீடு:சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், முந்திரி பருப்பு பயன்பாடு, மதிப்பீட்டை விட, வீழ்ச்சி கண்டுள்ளது. இதுவும், ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.அதேசமயம், பொருளாதார மந்த நிலை காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக, மேற்கத்திய நாடுகள் முந்திரியை, சராசரி அளவிற்கும், குறைவாகவே பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், இதற்கான பயன்பாடு சரிவைக் கண்டுள்ளது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என, நாயர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|