கியூ.ஐ.பி., பங்கு ஒதுக்கீடு: திரட்டிய தொகை ரூ.14,885 கோடிகியூ.ஐ.பி., பங்கு ஒதுக்கீடு: திரட்டிய தொகை ரூ.14,885 கோடி ... கடலில் மீன் பிடிக்க தடையால்முட்டை விலை மேலும் உயரும் கடலில் மீன் பிடிக்க தடையால்முட்டை விலை மேலும் உயரும் ...
நாட்டின் முந்திரி ஏற்றுமதி 15 சதவீதம் சரிவடையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2013
00:18

கொச்சி:சென்ற, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் முந்திரி ஏற்றுமதி, 10-15 சதவீதம் சரிவடையும் என, இந்திய முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (சி.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற, 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் முந்திரி ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 93,029 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 3,636 கோடி ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது.

முந்திரிக்கொட்டை:இது, இதற்கு முந்தைய, 2011-12ம் நிதியாண்டின் இதே காலத்தில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் முறையே, 1,21,578 டன் மற்றும் 4,017 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது என, சி.இ.பி.சி., புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சென்ற, 2011-12ம் நிதியாண்டில், முந்திரிக் கொட்டை ஏற்றுமதி, அளவுமற்றும் மதிப்பின் அடிப்படையில் முறையே, 1,31,760 டன் மற்றும் 4,391 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த, 2010-11ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, சென்ற, 2011-12ம் நிதியாண்டில், முந்திரி கொட்டை ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 24.6 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 56 சதவீதமும் சிறப்பாக வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்திரி பருப்பு பயன்பாட்டில், சர்வதேச அளவில், இந்தியா முன்னிலையில் உள்ளது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக, அளவின் அடிப்படையிலான, நம்நாட்டின் முந்திரி பயன்பாடு, 1,70,000 - 1,90,000 டன் என்ற அளவில் உள்ளது.இது தவிர, உலகளவில், முந்திரி கொட்டையை பதப்படுத்தி, ஏற்றுமதி செய்வதில், நம்நாடு முன்னணி நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது.டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால், சென்ற நிதியாண்டின் முதல், 11 மாதக் காலத்தில், ஏற்றுமதி செய்யப்பட்ட முந்திரியின் விலை, கிலோ ஒன்றுக்கு, 390.81 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 330.41 ரூபாயாக குறைந்து காணப்பட்டது.

வியட்நாம்:சர்வதேச அளவில், முந்திரிக்கான தேவை சுணக்கம் கண்டுள்ளது. இது தவிர, நம் நாட்டுடன் ஒப்பிடும் போது, வியட்நாம் போன்ற நாடுகள், மிக குறைந்த விலையில், உலக நாடுகளுக்கு முந்திரி ஏற்றுமதி செய்கின்றன.மேலும், உள்நாட்டிலும் முந்திரிக்கான தேவை, எதிர்பார்ப்பை விட, சரிவடைந்து உள்ளது. இது போன்ற காரணங்களால், இத்துறையில் ஈடுபட்டு வரும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்த கவுன்சிலின் தலைவர் ஹரி கிருஷ்ணன் ஆர். நாயர் தெரிவித்தார்.

மதிப்பீடு:சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், முந்திரி பருப்பு பயன்பாடு, மதிப்பீட்டை விட, வீழ்ச்சி கண்டுள்ளது. இதுவும், ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.அதேசமயம், பொருளாதார மந்த நிலை காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக, மேற்கத்திய நாடுகள் முந்திரியை, சராசரி அளவிற்கும், குறைவாகவே பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், இதற்கான பயன்பாடு சரிவைக் கண்டுள்ளது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என, நாயர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)