பதிவு செய்த நாள்
10 ஏப்2013
13:08
குழந்தைகளுக்கு, பள்ளி தேர்வுகள் முடிந்து விட்டன. சொந்தமாக கார் இருக்கிறது என்றால், சில நாட்களுக்கு, வெளியூர் பயணம் செல்லலாம் என்ற நினைப்பு வருவது சகஜம் தான். ஆனால், குடும்பத்துடன், சொந்த காரில், இன்ப சுற்றுலா புறப்படும் முன், கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. ஒரே நாளில், நீண்ட தூரம் பயணம் செய்வது, மிகவும் சலிப்பான ஒன்றாகி விடும். குறிப்பிட்ட தூரம் மட்டுமே, காரை ஓட்டிச் செல்ல வேண்டும். அடுத்த நாள், முழு தெம்புடன் பயணத்தை துவக்க, சரியான இடைவெளியுடன், கார் பயணத்தை திட்டமிட வேண்டும். சுற்றுலாவுக்கு புறப்படும் முன், சொந்த காரை தயார்படுத்தி கொள்ள வேண்டும். டயர்கள் சரியாக உள்ளனவா, இன்ஜின் ஆயில், பிரேக் ஆயில், வின்ஷில்டு வாஷர் போன்றவை நிரப்பப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ஏராளமான பொருட்களை சுமந்து கொண்டு சென்றால், சுற்றுலா இனிக்காது. எனவே, தேவையான பொருட்களை மட்டுமே கொண்டு செல்லுங்கள். எனினும், காருக்கு தேவையான டூல் கிட், ஸ்டெப்னி, மெடிக்கல் கிட், பிளாஷ்லைட், டேப் ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும். சுற்றுலா பயணத்துக்கு புறப்படும் முன், வரைப்படத்தை பார்த்து, எந்த ஊருக்கு, எந்த சாலையில் செல்ல வேண்டும் என்பதை நன்கு கவனித்து கொள்ள வேண்டும். காரில், வரைப்படத்தை கையோடு எடுத்து செல்வது மிகவும் நல்லது. தொடர்ச்சியாக பல மணி நேரம் காரை ஓட்ட வேண்டாம். அவ்வப்போது, காரை நிறுத்தி, காருக்கும், உங்களுக்கும், சிறிதளவு ஓய்வு கொடுங்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|