பதிவு செய்த நாள்
11 ஏப்2013
00:41
புதுடில்லி:நாட்டில், 16 ஆயிரம் மெகா வாட், மின் உற்பத்தி திட்டங்களுக்கு தேவையான, நிலக்கரியை சப்ளை செய்ய இயலாது என, மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
ஒப்பந்தம்:இந்தியாவில், 60 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திட்டங்களுக்கு தேவையான நிலக்கரியை சப்ளை செய்வது தொடர்பாக, கோல் இந்தியா நிறுவனம், வரும், 2014-15ம் நிதியாண்டிற்குள், 143 ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது.இவற்றில், நடப்பு நிதியாண்டில், மேற்கொள்ளப்பட உள்ள, 92 ஒப்பந்தங்களில், தற்போதைய நிலவரப்படி, 56 ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன.
இந்த மின் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரியை, கோல் இந்தியா வழங்க வேண்டும்.மேற்கண்ட திட்டங்கள் தவிர, மேலும், 16 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திட்டங்கள், துவக்க நிலையில் உள்ளன.இவற்றுக்கான நிலக்கரி வினியோகம் குறித்து ஆராய, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு உத்தரவின் பேரில், நிலக்கரி அமைச்சகம், மின்சாரம், உருக்கு உள்ளிட்ட, அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.பற்றாக்குறை:இக்குழுவிடம், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, 16 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிலக்கரியை வினியோகம் செய்ய இயலாது என, நிலக்கரி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|