16,000 மெகா வாட் மின் உற்பத்திக்குநிலக்கரி அளிக்க இயலாது: அமைச்சகம் 16,000 மெகா வாட் மின் உற்பத்திக்குநிலக்கரி அளிக்க இயலாது: அமைச்சகம் ... புது நெல் வரத்து துவக்கம்: குறைகிறது அரிசி விலை புது நெல் வரத்து துவக்கம்: குறைகிறது அரிசி விலை ...
இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு 456 கோடி டாலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2013
00:44

புதுடில்லி:நடப்பாண்டின், ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், இந்திய நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, 456 கோடி டாலராக (25,080 கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டுள்ளது.வீழ்ச்சி:இது, கடந்த 2012ம் ஆண்டின், இதே காலாண்டில், 1,839 கோடி டாலராக (1.01 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது.ஆக, மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, 75 சதவீதம் சரிவடைந்து உள்ளது என, கிரான்ட் தார்ன்டன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார சுணக்க நிலை காரணமாக, மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. எனினும், பல்வேறு துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு, சீர்திருத்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து,வரும் காலாண்டுகளில், நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கும் என, ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரி ராஜா லஹிரி தெரிவித்தார். நடப்பாண்டின் முதல் காலாண்டில், உள்நாடு தவிர்த்த, நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள், கடந்தாண்டின் இதே காலாண்டை காட்டிலும், 14 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

குறிப்பாக, வெளிநாட்டு நிறுவனங்கள், 29 ஒப்பந்தங்கள் வாயிலாக, 290 கோடி டாலர் மதிப்பிற்கு, இந்திய நிறுவனங்களை கையகப்படுத்திஉள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில், 126 கோடி டாலராக (36 ஒப்பந்தங்கள்) குறைந்து காணப்பட்டது.அதேசமயம், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தலின் மதிப்பு, 141 கோடி டாலராக (66 ஒப்பந்தங்கள்) சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலாண்டில், 201 கோடி டாலராக (71 ஒப்பந்தங்கள்) அதிகரித்து காணப்பட்டது.

மருந்து:மதிப்பீட்டு காலாண்டில், இந்திய நிறுவனங்கள், 21 ஒப்பந்தங்கள் மூலம், 19 லட்சம் டாலர் மதிப்பிலான, அன்னிய நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில், முறையே 26 ஒப்பந்தங்கள் மற்றும் 69 லட்சம் டாலராக உயர்ந்து காணப்பட்டது.குறிப்பாக, இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளில், மருந்து மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)