பதிவு செய்த நாள்
11 ஏப்2013
10:09
தேனி: தமிழகத்தில், புதுநெல் வரத்து துவங்கி விட்டதால், அரிசி விலை குறைந்துள்ளது. வறட்சி, விளைச்சல் வீழ்ச்சி காரணங்களைக் காட்டி, கடந்த ஆறு மாதங்களாக அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன், மார்க்கெட்டில் அரிசி விலை முதன் முறையாக கிலோவிற்கு 2 ரூபாய் வரை குறைந்தது. நேற்று இரண்டாவது முறையாக அனைத்து ரக அரிசியும், கிலோவிற்கு 1 முதல் 1.50 விலை குறைந்துள்ளது. விலை குறைக்கப்பட்ட பின், ஐ.ஆர்., 20 ரக அரிசி புதியது கிலோ 24.50 ரூபாய், ஐ.ஆர்., 50 புதியது கிலோ 23.50, கல்சர் புதியது 26, செல்லப்பொன்னி பழையது 36, புதியது 28.50 , கர்நாடகா சோனா பொன்னி 38, பி.பி.டி., அரிசி 35.50, டீலக்ஸ் அரிசி 30 , ராஜபோகம் புதியது 38 ரூபாய்,என விற்கப்படுகிறது. சேலம் மாவட்டம், தேனி மாவட்டம் பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், கம்பம், சின்னமனூர் பகுதிகளில் இருந்து, தற்போது அறுவடையான நெல் மார்க்கெட்டிற்கு வந்துள்ளது. இன்னும் 15 நாட்களில் மன்னார்குடி, தஞ்சாவூர் பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் அறுவடை செய்யப்பட்ட புது நெல் விற்பனைக்கு வந்து விடும். இது போன்ற காரணங்களால், அரிசி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக, தேனி வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|