புது நெல் வரத்து துவக்கம்: குறைகிறது அரிசி விலைபுது நெல் வரத்து துவக்கம்: குறைகிறது அரிசி விலை ... கம்ப்யூட்டர் விற்பனை 11.2 சதவீதம் வீழ்ச்சி கம்ப்யூட்டர் விற்பனை 11.2 சதவீதம் வீழ்ச்சி ...
பலாப் பழங்கள் விற்பனை அமோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2013
10:56

தர்மபுரி: தர்மபுரியில் பலாப் பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
கோடை வெயில் வாட்டி எடுக்க துவங்கிய நிலையில், பொது மக்கள் கோடை காலத்துக்கு ஏற்ப உணவு பழக்க வழக்கங்களை மாற்ற துவங்கியுள்ளனர். சூடான ஆகாரங்களை தவிர்த்து, குளிர்ந்த ஆகாரங்களை சாப்பிட துவங்கியுள்ளனர். அதே போல் நீர் சத்துள்ள பழங்களையும் அதிகம் விரும்பி சாப்பிட துவங்கியுள்ளனர்.
நீர் சத்து பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை ஆகியவை விற்பனை அதிகரித்துள்ள நிலையில் நா வறட்சியை போக்கும் தர்பூசணி, பலாப் பழங்களும் விற்பனைக்கு அதிகம் வரத்துவங்கியுள்ளது. பலாப் பழங்களை பொறுத்த வரையில் உள்ளூர் பகுதியை விட வெளி மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கேரளா மாநிலங்களில் இருந்து பழங்கள் தர்மபுரிக்கு விற்பனைக்கு வருகிறது.
தற்போது, பலாப் பழ சீஸன் துவங்கியுள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து பலாப் பழங்கள் வாரம் ஒரு லோடு வரையில் லாரிகளில் கொள்முதல் செய்யப்பட்டு தர்மபுரிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மொத்த விற்பனை கடைகளில் இருந்து கொள்முதல் செய்யும் சிறு வியாபாரிகள் தள்ளுவண்டி கடைகளில் பழங்களை விற்பனை செய்கின்றனர். முதல் தரமான பழங்கள் ஐந்து எண்ணிக்கை 10 ரூபாய்க்கும், மூன்றாம் தரம் 10 எண்ணிக்கை பத்து ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து வரும் பழங்கள் அதிக சுவையுடன் இருப்பதால், பொது மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். கோடை நா வறட்சியை சற்று போக்கும் என்பதோடு, மற்ற பழங்களை விட விலையும் மலிவாக கிடைப்பதால், நடுத்தர மக்கள் பலாப் பழங்களை அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)