பதிவு செய்த நாள்
11 ஏப்2013
10:56
தர்மபுரி: தர்மபுரியில் பலாப் பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
கோடை வெயில் வாட்டி எடுக்க துவங்கிய நிலையில், பொது மக்கள் கோடை காலத்துக்கு ஏற்ப உணவு பழக்க வழக்கங்களை மாற்ற துவங்கியுள்ளனர். சூடான ஆகாரங்களை தவிர்த்து, குளிர்ந்த ஆகாரங்களை சாப்பிட துவங்கியுள்ளனர். அதே போல் நீர் சத்துள்ள பழங்களையும் அதிகம் விரும்பி சாப்பிட துவங்கியுள்ளனர்.
நீர் சத்து பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை ஆகியவை விற்பனை அதிகரித்துள்ள நிலையில் நா வறட்சியை போக்கும் தர்பூசணி, பலாப் பழங்களும் விற்பனைக்கு அதிகம் வரத்துவங்கியுள்ளது. பலாப் பழங்களை பொறுத்த வரையில் உள்ளூர் பகுதியை விட வெளி மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கேரளா மாநிலங்களில் இருந்து பழங்கள் தர்மபுரிக்கு விற்பனைக்கு வருகிறது.
தற்போது, பலாப் பழ சீஸன் துவங்கியுள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து பலாப் பழங்கள் வாரம் ஒரு லோடு வரையில் லாரிகளில் கொள்முதல் செய்யப்பட்டு தர்மபுரிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மொத்த விற்பனை கடைகளில் இருந்து கொள்முதல் செய்யும் சிறு வியாபாரிகள் தள்ளுவண்டி கடைகளில் பழங்களை விற்பனை செய்கின்றனர். முதல் தரமான பழங்கள் ஐந்து எண்ணிக்கை 10 ரூபாய்க்கும், மூன்றாம் தரம் 10 எண்ணிக்கை பத்து ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து வரும் பழங்கள் அதிக சுவையுடன் இருப்பதால், பொது மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். கோடை நா வறட்சியை சற்று போக்கும் என்பதோடு, மற்ற பழங்களை விட விலையும் மலிவாக கிடைப்பதால், நடுத்தர மக்கள் பலாப் பழங்களை அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|