பதிவு செய்த நாள்
12 ஏப்2013
00:28
நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 310 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 300 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 10 காசு உயர்ந்து, 310 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பரவலாக முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதால், முட்டை விலை ஏற்றமான சூழலில் உள்ளது என, கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம்:சென்னை, 310 காசு, பெங்களூரு, 295 காசு, மைசூர், 295 காசு, ஹைதராபாத், 274 காசு, மும்பை, 309 காசு, விஜயவாடா, 287 காசு, @கால்கட்டா, 356 காசு, பார்வாலா, 262 காசு, டில்லி, 272 காசு என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டைக் கோழி விலை, 57 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறி கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை, 69 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|