பதிவு செய்த நாள்
16 ஏப்2013
01:22
நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் நவரத்தினங் கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,500 கோடி டாலராக (2.47 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜி.ஜே.இ.பி.சி) தெரிவித்துள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 3,900 கோடி டாலரை (2.14 லட்சம் கோடி ரூபாய்) எட்டியுள்ளது. எனினும், பொருளாதார சுணக்க நிலையால், டாலர் மதிப்பின் அடிப்படையிலான இதன் ஏற்றுமதி, 9.3 சதவீதம் சரிவடைந்துள்ளது என, ஜி.ஜே.இ.பி.சி., யின் தலைவர் விபுல் ஷா தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி,15 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நம்நாடு, அமெரிக்கா, ஐரோப்பா, ஐக்கிய அரபு நாடுகள், ஹாங்காங் உள்ளிட்ட பாரம்பரிய சந்தைகளுக்கு நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.இது தவிர, புதிய சந்தைகளான, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளின் பக்கமும் ஏற்றுமதியாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|