பதிவு செய்த நாள்
19 ஏப்2013
01:50
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று நன்கு இருந்தது. மத்திய அரசு, ஏற்றுமதியைஅதிகரிக்கும் வகையில், பல்வேறு புதிய ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை அறிவித்தது.இதையடுத்து, நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால், முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர். இதையடுத்து, "சென்செக்ஸ்,' 1.52 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது.
மேலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. எனினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், நுகர்வோர் சாதனங்கள், வங்கி, பொறியியல், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, அதிக தேவை இருந்தது. இருப்பினும், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் மட்டும் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 285.30 புள்ளிகள் அதிகரித்து, 19,016.46 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,058.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,691.61 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட <உதவும், 30 நிறுவனங்களுள், விப்ரோ, டி.சி.எஸ்., சன்பார்மா மற்றும்டாக்டர் ரெட்டீஸ் ஆகிய நான்கு நிறுவனப் பங்குகளை தவிர, ஏனைய, 26 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி,' 94.40 புள்ளிகள் உயர்ந்து, 5,783.10 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,794.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,681.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|