பதிவு செய்த நாள்
19 ஏப்2013
09:45
மும்பை: ஏப்ரல் 19 ராமநவமியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று நன்கு இருந்தது. நேற்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 285.30 புள்ளிகள் அதிகரித்து, 19,016.46 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,058.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,691.61 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், விப்ரோ, டி.சி.எஸ்., சன்பார்மா மற்றும் டாக்டர் ரெட்டீஸ் ஆகிய நான்கு நிறுவனப் பங்குகளை தவிர, ஏனைய, 26 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி,' 94.40 புள்ளிகள் உயர்ந்து, 5,783.10 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,794.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,681.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|