பதிவு செய்த நாள்
21 ஏப்2013
00:23
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, கடந்த 12ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 140 கோடி டாலர் (7,700 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,525 கோடி டாலராக (16.24 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 120 கோடி டாலர் அதிகரித்து, 29,385 கோடி டாலராக (16.16 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது, என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 139 கோடி டாலர் (7,645 கோடி ரூபாய்) அதிகரித்து, 26,290 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கணக்கீட்டுக் காலத்தில், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில், எவ்வித மாற்றமுமின்றி, 2,569 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பும், 61 லட்சம் டாலர் அதிகரித்து, 231 கோடி டாலராகவும், எஸ்.டீ.ஆர். மதிப்பு, 1.15 கோடி டாலர் உயர்ந்து, 434 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென், உள்ளிட்ட இதர நாட்டுச் செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி, தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|