தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ... தொலைதொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 89.20 கோடி தொலைதொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 89.20 கோடி ...
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ. 7,700 கோடி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2013
00:23

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, கடந்த 12ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 140 கோடி டாலர் (7,700 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,525 கோடி டாலராக (16.24 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 120 கோடி டாலர் அதிகரித்து, 29,385 கோடி டாலராக (16.16 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது, என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 139 கோடி டாலர் (7,645 கோடி ரூபாய்) அதிகரித்து, 26,290 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கணக்கீட்டுக் காலத்தில், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில், எவ்வித மாற்றமுமின்றி, 2,569 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பும், 61 லட்சம் டாலர் அதிகரித்து, 231 கோடி டாலராகவும், எஸ்.டீ.ஆர். மதிப்பு, 1.15 கோடி டாலர் உயர்ந்து, 434 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென், உள்ளிட்ட இதர நாட்டுச் செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி, தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)