பதிவு செய்த நாள்
27 ஏப்2013
00:40
மும்பை: நடப்பு ஏப்ரல் மாதத்தின் முதல் 15 தினங்களில்,நாட்டின் முன்பேர சந்தைகளில், 7.87 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என, பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 5.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கணக்கீட்டு காலத்தில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், 61 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.39 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 3.85 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதர உலோகங்கள் மீதான வர்த்தகம், 1.13 லட்சம் கோடியிலிருந்து, 1.31 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வேளாண் விளைபொருட்கள் மீதான வணிகம், 77,667 கோடியிலிருந்து, 85,853 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
எரிபொருட்கள் மீதான வர்த்தகம், 83,006 கோடியிலிருந்து, 1.86 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. நம் நாட்டில், தேசிய அளவில், ஐந்து சந்தைகளும், பிராந்திய அளவில், 16 முன்பேர சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|