பதிவு செய்த நாள்
01 மே2013
00:46
தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த பத்தாண்டுகளில் மும்மடங்கும், முதலீடு, 10 மடங்கும் உயர்ந்துள்ளது.கடந்த 2003-04ம் நிதியாண்டு முதல், சென்ற 2012-13ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் தேதி வரை, தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 25,794லிருந்து, 83,348 ஆக, மும்மடங்கு உயர்ந்துள்ளது.
பங்களிப்பு:இதே காலத்தில், இந்த தொழிற்பிரிவுகளின் மீதான முதலீடு, 722.16 கோடி ரூபாயில் இருந்து, 10 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்து, 8,751.54 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த 2006-07ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டில் செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில், தமிழகம், 14.95 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது.மேலும், இந்தியாவில் அதிக அளவில் குறுந்தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலம் (15.24 சதவீதம்) என்ற சிறப்பையும், தமிழ்நாடு பெற்றுள்ளது.தமிழகம், சிறு தொழில் நிறுவனங்களில், 9.60 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்தையும், நடுத்தர தொழில் நிறுவனங்களில், 9.21 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.தமிழக அரசு, அனைத்து துறைகளின் மேம்பாட்டிற்காக, "தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023' என்ற கொள்கை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, தொழில்துறையின் மேம்பாட்டிற்கான நிதி, தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்தி தருவது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.
மேலும், தொழில்துறையில் ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துவது, மேம்பாட்டு கொள்கைகளை வகுப்பது, திறன் மேம்பாட்டு பயிற்சி வசதிகளை வழங்குவது போன்ற செயல்பாடுகளும் நடைமுறைக்கு வர உள்ளன.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கொண்ட, தொகுப்பு பகுதிகளை உருவாக்கி, செலவினங்களை குறைத்து, சந்தைப் போட்டியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளும் துவக்கப்பட உள்ளன.
செயல்பாடு:இத்தகைய செயல்பாடுகள் மூலம், நடப்பு 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், கூடுதலாக, 15 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க, தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.சென்ற நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, 9 மாதங்களில், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு, முறையே 9,409.44 கோடி ரூபாய் மற்றும் 8,483.02 கோடி ரூபாய் கடன் வழங்க, அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதே காலத்தில், குறு மற்றும் சிறு தொழில்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடனில், குறுந்தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன், 39.56 சதவீதத்தில் இருந்து, 52.59 சதவீதமாக அதிகரித்துள்ளது.வங்கி கடன்:மதிப்பீட்டு காலத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, வங்கிகள் வழங்கிய கடன், 55,740.64 கோடி ரூபாயில் இருந்து, 62,682.65 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், மேற்கண்ட தொழில்களுக்கு, கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன், 1,825.89 கோடியில் இருந்து, 2,504.09 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த இரண்டு நிதியாண்டுகளில், தமிழக அரசு, 938 ஏக்கரில், 15 புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க திட்டமிட்டிருந்தது. இவற்றில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரசத்தவலசு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெண்மணியாத்தூர் தொழிற்பேட்டைகள் செயல்படத் துவங்கியுள்ளன. எஞ்சிய, 13 தொழிற்பேட்டைகளின் பணிகள், பல்வேறு கட்டங் களாக நடைபெற்று வருகின்றன.மேற்கண்டவை தவிர, தமிழக அரசு, எதிர்கால தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 22 பகுதிகளில், 1,611 ஏக்கர் பரப்பில் தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்துள்ளது.நடப்பு 2013-14ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு, 339 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது, கடந்த 2012-13ம் நிதியாண்டின், மேற்கண்ட துறைக்கான பட்ஜெட் மறுமதிப்பீட்டு அளவான, 280 கோடி ரூபாயை விட, அதிகமாகும்.@வலைவா#ப்பு:தமிழகத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் பங்களிப்பு, 10 சதவீதமாக உள்ளது. இத்துறை, 48,189 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, 58.83 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது.பொறியியல், மின்சாரம், ரசாயனம், பிளாஸ்டிக் என, பலதரப்பட்ட பிரிவுகளின் கீழ், 8,000க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக, தமிழக அரசு, பெண்களுக்கென, ஐந்து பிரத்யேக தொழிற்பேட்டைகளை அமைத்துள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|