குறுந்தொழில் நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்:சிறு, நடுத்தர தொழில் முதலீடு 10 மடங்கு உயர்வுகுறுந்தொழில் நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்:சிறு, நடுத்தர தொழில் ... ... ஊட்டச் சத்து உர மானியத்திற்குமத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் ஊட்டச் சத்து உர மானியத்திற்குமத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் ...
பெட்ரோல் விலை லிட்டருக்கு சென்னையில் ரூ.3.18 குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2013
08:34

புதுடில்லி : பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 3 ரூபாய் நேற்று குறைக்கப்பட்டது. சென்னையில், இந்த விலை குறைப்பு, 3.18 ரூபாய். நேற்று நள்ளிரவு முதல், விலை குறைப்பு அமலுக்கு வந்தது.பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டதை அடுத்து, சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையை, மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த மார்ச், 16ம் தேதி, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 2 ரூபாய் குறைக்கப்பட்டது. இதன்பின், கடந்த, 2ம் தேதி, லிட்டருக்கு, 85 காசுகளும், 15ம் தேதி, ஒரு ரூபாயும் குறைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நேற்று, லிட்டருக்கு, 3 ரூபாய் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விலை குறைப்பால், உள்ளூர் விற்பனை வரி அல்லது வாட் வரிகளும் குறையும் என்பதால், சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 3.18 ரூபாய் குறைந்துள்ளது. இதற்கு முன், சென்னையில், 69.08 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று நள்ளிரவு முதல், 65.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சமீபத்திய விலை குறைப்பில், இது தான் அதிகபட்சம். விலை குறைப்பு பற்றி கேள்விப்பட்டதும், பெட்ரோல் பங்குகளில், நேற்று இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களின் வரத்து குறைவாக இருந்தது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 7 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)