பதிவு செய்த நாள்
01 மே2013
08:34
புதுடில்லி : பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 3 ரூபாய் நேற்று குறைக்கப்பட்டது. சென்னையில், இந்த விலை குறைப்பு, 3.18 ரூபாய். நேற்று நள்ளிரவு முதல், விலை குறைப்பு அமலுக்கு வந்தது.பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டதை அடுத்து, சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையை, மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த மார்ச், 16ம் தேதி, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 2 ரூபாய் குறைக்கப்பட்டது. இதன்பின், கடந்த, 2ம் தேதி, லிட்டருக்கு, 85 காசுகளும், 15ம் தேதி, ஒரு ரூபாயும் குறைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நேற்று, லிட்டருக்கு, 3 ரூபாய் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விலை குறைப்பால், உள்ளூர் விற்பனை வரி அல்லது வாட் வரிகளும் குறையும் என்பதால், சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 3.18 ரூபாய் குறைந்துள்ளது. இதற்கு முன், சென்னையில், 69.08 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று நள்ளிரவு முதல், 65.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சமீபத்திய விலை குறைப்பில், இது தான் அதிகபட்சம். விலை குறைப்பு பற்றி கேள்விப்பட்டதும், பெட்ரோல் பங்குகளில், நேற்று இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களின் வரத்து குறைவாக இருந்தது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 7 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|