பதிவு செய்த நாள்
02 மே2013
00:18
புதுடில்லி:நடப்பு நிதியாண்டிற்கு, ஊட்டச்சத்து அடிப்படையிலான உரங்களின் மானியத்திற்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உரங்கள் துறை, கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல், ஊட்டச் சத்து அடிப்படையில், உரங்களுக்கான மானியத்தை ஆண்டுதோறும் நிர்ணயித்து வருகிறது.இதன்படி, பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் உரங்களில் அடங்கியுள்ள நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ், சல்பர் ஆகிய ஊட்டச்சத்துக்களுக்கான மானிய விலை, கிலோவுக்கு முறையே, 20,875 ரூபாய், 18,679 ரூபாய், 18,333 ரூபாய் மற்றும் 1,677 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையின் அடிப்படையில், டை அமோனியம் பாஸ்பேட் (டீ.ஏ.பி.,), மியூரியேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.,) ஆகியவற்றுக்கான மானியம், ஒரு டன்னுக்கு, முறையே 12,350 ரூபாய் மற்றும், 11,300 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த விலை, சென்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் ஓராண்டிற்கு நடைமுறையில் இருக்கும்.
நடப்பு நிதியாண்டில், டீ.ஏ.பி., மற்றும் எம்.ஓ.பி., ஆகியவற்றின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விலை நிர்ணயப்படி, நடப்பு நிதியாண்டில், பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசியம் உரங்களின் விலை, 15 சதவீதம் குறையும்.இத்துடன் மத்திய அரசின் உர மானியச் செலவும் குறையும். எனினும், உரத்தின் நுகர்வு அடிப்படையில், மத்திய அரசின் மானியச் செலவு இருக்கும். சென்ற 2012-13ம் நிதியாண்டு பட்ஜெட்டில், உர மானியத்திற்கு, 30,576 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|