பெட்ரோல் விலை லிட்டருக்கு சென்னையில் ரூ.3.18 குறைந்ததுபெட்ரோல் விலை லிட்டருக்கு சென்னையில் ரூ.3.18 குறைந்தது ... டப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக குறையும்: மான்டேக் டப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக குறையும்: மான்டேக் ...
ஊட்டச் சத்து உர மானியத்திற்குமத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2013
00:18

புதுடில்லி:நடப்பு நிதியாண்டிற்கு, ஊட்டச்சத்து அடிப்படையிலான உரங்களின் மானியத்திற்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உரங்கள் துறை, கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல், ஊட்டச் சத்து அடிப்படையில், உரங்களுக்கான மானியத்தை ஆண்டுதோறும் நிர்ணயித்து வருகிறது.இதன்படி, பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் உரங்களில் அடங்கியுள்ள நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ், சல்பர் ஆகிய ஊட்டச்சத்துக்களுக்கான மானிய விலை, கிலோவுக்கு முறையே, 20,875 ரூபாய், 18,679 ரூபாய், 18,333 ரூபாய் மற்றும் 1,677 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையின் அடிப்படையில், டை அமோனியம் பாஸ்பேட் (டீ.ஏ.பி.,), மியூரியேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.,) ஆகியவற்றுக்கான மானியம், ஒரு டன்னுக்கு, முறையே 12,350 ரூபாய் மற்றும், 11,300 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த விலை, சென்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் ஓராண்டிற்கு நடைமுறையில் இருக்கும்.
நடப்பு நிதியாண்டில், டீ.ஏ.பி., மற்றும் எம்.ஓ.பி., ஆகியவற்றின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விலை நிர்ணயப்படி, நடப்பு நிதியாண்டில், பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசியம் உரங்களின் விலை, 15 சதவீதம் குறையும்.இத்துடன் மத்திய அரசின் உர மானியச் செலவும் குறையும். எனினும், உரத்தின் நுகர்வு அடிப்படையில், மத்திய அரசின் மானியச் செலவு இருக்கும். சென்ற 2012-13ம் நிதியாண்டு பட்ஜெட்டில், உர மானியத்திற்கு, 30,576 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)