பதிவு செய்த நாள்
03 மே2013
00:56
புதுடில்லி:வரி செலுத்தாமல் ஏய்ப்போரை, மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு, சும்மா இருக்காது, அவர்களை வரி செலுத்துவோர் வட்டத்திற்குள் கொண்டு வரும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.பார்லிமென்டில், நிதி மசோதா மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:
நாட்டில் ஒழுங்காக வரி செலுத்துவோர் உள்ளனர். வரி ஏய்ப்பு செய்வோரும், அவர்களுக்கு உதவுவோரும் கூட உள்ளனர். நம் நாட்டில், 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவதாக ஒப்புக் கொண்டவர்களின் எண்ணிக்கை, 42,800 என்ற அளவிற்கே உள்ளது என்பது வெட்கக் கேடானது.நடப்பாண்டில், சென்ற ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில், கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஏராளமானோருக்கு, வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன் பயனாக, கூடுதலாக, 50 லட்சம் பேர் வரி செலுத்திஉள்ளனர். இதே போன்ற நடைமுறை, நடப்பு நிதியாண்டிலும் கடைபிடிக்கப்படும். மேலும் ஏராளமானோர், வரி செலுத்துவோர் வட்டத்திற்குள் கொண்டு வரப்படுவர்.வரி நிலுவையை வசூலிப்பதில் மேலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி வசூலை உயர்த்த வேண்டும்.நவீன தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டும், அதே சமயம் வரி வசூலிப்பில் பிற வழிகளை நாடக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டிற்குள் வருவாய் துறை, பணியாற்ற வேண்டியுள்ளது.இருந்தபோதிலும், இத்தகைய நடவடிக்கைகளால், நடப்பு நிதியாண்டில், வரி வசூல் சிறப்பாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|