தங்கம் விலை சவரனுக்கு ரூ.40  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ... மடி கணினி விலை குறைப்பில் நிறுவனங்கள் மடி கணினி விலை குறைப்பில் நிறுவனங்கள் ...
அன்னிய நேரடி முதலீட்டைஅதிகரிக்க அரசு நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2013
00:36

புதுடில்லி:உள்நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதற்கான, அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருவதாக, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. உள்நாட்டில், அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தெந்த துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது பற்றி ஆராயப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இந்தியாவில், சில்லரை வணிகத்தில், அதிகளவில், அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த, பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் வாயிலாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வாய்ப்பு உள்ளது.சில தினங்களுக்கு முன்பாக, வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த, ஐ.கே.இ.ஏ., நிறுவனத்தின், 10,500 கோடி ரூபாய் மதிப்பிற்கான அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக, நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம், 6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)