பதிவு செய்த நாள்
04 மே2013
00:36
புதுடில்லி:உள்நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதற்கான, அனைத்து
சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருவதாக, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம்
ராஜன் தெரிவித்தார்.டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர்
பேசியதாவது:நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
உள்நாட்டில், அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் வகையில், பல்வேறு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தெந்த துறைகளில், அன்னிய
நேரடி முதலீட்டை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது பற்றி
ஆராயப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இந்தியாவில், சில்லரை வணிகத்தில், அதிகளவில், அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த, பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் வாயிலாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வாய்ப்பு உள்ளது.சில தினங்களுக்கு முன்பாக, வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த, ஐ.கே.இ.ஏ., நிறுவனத்தின், 10,500 கோடி ரூபாய் மதிப்பிற்கான அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக, நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம், 6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|