மின் உற்பத்தி திறனை உயர்த்த ரூ.5 லட்சம் கோடி முதலீடு:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்...மின் உற்பத்தி திறனை உயர்த்த ரூ.5 லட்சம் கோடி முதலீடு:நடப்பு 12வது ஐந்தாண்டு ... ... பருத்தி உற்பத்தி 3.40 கோடிபொதிகளாக இருக்கும் பருத்தி உற்பத்தி 3.40 கோடிபொதிகளாக இருக்கும் ...
அன்னிய நிதி நிறுவனங்களின்பங்கு முதலீடு ரூ.63,643 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2013
03:50

புதுடில்லி:நடப்பு 2013ம் ஆண்டில், இது வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), இந்திய பங்குச் சந்தைகளில், 63,643 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.நடப்பு மே மாதத்தில், முதல் இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், ஒட்டு மொத்த அளவில், 8,745 கோடி ரூபாய் மதிப்பிற்கு, நிறுவனப் பங்குகளை வாங்கியுள்ளன. அதேசமயம், 5,869 கோடி ரூபாய் மதிப்பிற்கான பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இதையடுத்து, இந்நிறுவனங்களின், நிகர பங்கு முதலீடு, 2,606 கோடி ரூபாயாக உள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி'யின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சாதகமற்ற அரசியல் சூழ்நிலை, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு போன்ற காரணங்களால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளும் முதலீடு குறைந்துள்ளது.குறிப்பாக, சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்நிறுவனங்களின் பங்கு முதலீடு, கடந்த, 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 5,414 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

சென்ற ஏப்ரல் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவில் கடன்பத்திரங்களில், 2,929 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. ஒட்டு மொத்த அளவில், நடப்பாண்டில் இதுவரையிலுமாக, இந்நிறுவனங்கள், கடன்பத்திரங்களில், மேற்கொண்ட முதலீடு, 21,007 கோடி ரூபாயாக உள்ளது.நடப்பு மே மாதம் 3ம் தேதி நிலவரப்படி, இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் வகையில், பதிவு செய்து கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,769 ஆக உள்ளது. துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,383 ஆக உள்ளது என, "செபி' அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)