தங்கம் விலை சவரனுக்கு ரூ.56  குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு ... கோழிப்பண்ணை அமைக்க தமிழக அரசு 25 சதவீதம் மானியம் கோழிப்பண்ணை அமைக்க தமிழக அரசு 25 சதவீதம் மானியம் ...
கோதுமை கொள்முதல் இலக்கு 3.30 கோடி டன்னாக குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2013
00:39

புதுடில்லி:நடப்பு 2013-14ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், மத்திய அரசின் கோதுமை கொள்முதல், இலக்கு, 25 சதவீதம் குறைக்கப்பட்டு, 3.30 கோடி டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனால், மத்திய அரசுக்கு, 3,000 கோடி ரூபாய் மிச்சமாகும் என, உணவு அமைச்சகத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோதுமை உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்ததால், சென்ற ஏப்ரலில் துவங்கிய, நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், 4.41 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய, மத்திய அரசு, இலக்கு நிர்ணயித்திருந்தது. இது, இதற்கு முந்தைய வேளாண் பருவத்தில், 3.81 கோடி டன்னாக இருந்தது.இந்நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில், தனியார் நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து, கோதுமை கொள்முதல்
செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், நடப்பு சந்தைப் பருவத்தில், மத்திய அரசு, கோதுமை கொள்முதல் செய்யும் இலக்கை, 3.30 கோடி டன்னாக குறைத்துள்ளது
இதன்படி, பஞ்சாப் மாநிலத்திலிருந்து, 1.10 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, அரியானா (70 லட்சம் டன்), மத்திய பிரதேசம் (90 கோடி டன்), உத்தர பிதேசம் (30 லட்சம் டன்) மற்றும் பீகார் (25 லட்சம் டன்) ஆகிய மாநிலங்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவிற்கு கோதுமை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்திய உணவு கழகத்தின் (எப்.சி.ஐ.,) புள்ளிவிவரத்தின்படி, மத்திய அரசு, இது வரையிலுமாக, குவிண்டால் ஒன்றுக்கு, 1,350 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 2 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளது.
சென்ற ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, பொதுத் துறையான எப்.சி.ஐ.,யின் கைவசம், 2.42 கோடி டன் கோதுமை கையிருப்பு உள்ளது. இதையடுத்து, நடப்பாண்டில், எப்.சி.ஐ., கிடங்குகளில், ஒட்டு மொத்த கோதுமை கையிருப்பு, 5.72 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)