பதிவு செய்த நாள்
08 மே2013
00:39
புதுடில்லி:நடப்பு 2013-14ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், மத்திய அரசின் கோதுமை கொள்முதல், இலக்கு, 25 சதவீதம் குறைக்கப்பட்டு, 3.30 கோடி டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனால், மத்திய அரசுக்கு, 3,000 கோடி ரூபாய் மிச்சமாகும் என, உணவு அமைச்சகத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோதுமை உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்ததால், சென்ற ஏப்ரலில் துவங்கிய, நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், 4.41 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய, மத்திய அரசு, இலக்கு நிர்ணயித்திருந்தது. இது, இதற்கு முந்தைய வேளாண் பருவத்தில், 3.81 கோடி டன்னாக இருந்தது.இந்நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில், தனியார் நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து, கோதுமை கொள்முதல்
செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், நடப்பு சந்தைப் பருவத்தில், மத்திய அரசு, கோதுமை கொள்முதல் செய்யும் இலக்கை, 3.30 கோடி டன்னாக குறைத்துள்ளது
இதன்படி, பஞ்சாப் மாநிலத்திலிருந்து, 1.10 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, அரியானா (70 லட்சம் டன்), மத்திய பிரதேசம் (90 கோடி டன்), உத்தர பிதேசம் (30 லட்சம் டன்) மற்றும் பீகார் (25 லட்சம் டன்) ஆகிய மாநிலங்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவிற்கு கோதுமை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்திய உணவு கழகத்தின் (எப்.சி.ஐ.,) புள்ளிவிவரத்தின்படி, மத்திய அரசு, இது வரையிலுமாக, குவிண்டால் ஒன்றுக்கு, 1,350 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 2 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளது.
சென்ற ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, பொதுத் துறையான எப்.சி.ஐ.,யின் கைவசம், 2.42 கோடி டன் கோதுமை கையிருப்பு உள்ளது. இதையடுத்து, நடப்பாண்டில், எப்.சி.ஐ., கிடங்குகளில், ஒட்டு மொத்த கோதுமை கையிருப்பு, 5.72 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|