பதிவு செய்த நாள்
08 மே2013
00:41
தமிழகத்தில், கோழிப் பண்ணை இல்லாத பகுதிகளில், அவற்றை அதிக அளவில் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, 7 பின்தங்கிய பிராந்தியங்களில், கோழிப் பண்ணை தொகுப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளது.
திட்டச்செலவு:இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தொழில் முனைவோர், சுயஉதவிக் குழுவினர் ஆகியோர், கோழிப் பண்ணை அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், திட்டச் செலவில், 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். இத்துடன், அவர்களுக்கு, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் மூலம், வர்த்தக ரீதியிலான கோழி வளர்ப்பு குறித்த, 5 நாள் பயிற்சியும் வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்காக, தமிழக அரசு, 22.35 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.தற்போது, மத்திய அரசின் கோழிப் பண்ணை துணிகர முதலீட்டு நிதியம் (பி.வி.சி.எப்.,), நபார்டு வங்கி வாயிலாக, கோழிப் பண்ணை அமைக்க விரும்பும் தனிப்பட்ட நபர்களுக்கு, 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. திட்டச் செலவின் எஞ்சிய தொகையை, வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழக அரசு, அதன் கோழிப் பண்ணை தொகுப்பு திட்டத்தை, மத்திய அரசின் பி.வி.சி.எப்., அமைப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.இதன் மூலம், தமிழகத்தின் பின் தங்கிய பகுதிகளில், கோழிப்பண்ணை அமைக்க விரும்புவோர், திட்டச் செலவில், மத்திய, மாநில அரசின் பங்கான, 50 சதவீத மானியத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டில், தமிழக கோழிப் பண்ணை துறையின் கடன் தகுதி, 1,330 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியில், தமிழகத்தின் பங்களிப்பு, 20 சதவீதமாக உள்ளது. இம்மாநிலத்தின் முட்டை உற்பத்தி, ஆண்டுக்கு, 2,000 கோடி என்ற அளவிலும், வர்த்தக மதிப்பு, 7,500 கோடி ரூபாயாகவும் உள்ளது.இது, வரும் 2015ம் ஆண்டு, 9,000 கோடி ரூபாயாக உயரும் என, "அசோசெம்' அமைப்பு மதிப்பிட்டுள்ளது.கோழிப் பண்ணை விவசாயிகளில் பெரும்பாலோர், மாதம், 10 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுகின்றனர்.
நாமக்கல் மாவட்டம்:தமிழகத்தில், நாமக்கல் மாவட்டம், முட்டை உற்பத்தியிலும், பல்லடம் பகுதி, பிராய்லர் கோழி உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளன. மாநிலத்தில், கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தியை பரவலாக்க, தமிழக அரசின் கோழிப்பண்ணை தொகுப்பு திட்டம் உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முட்டை உற்பத்தி:தமிழகத்தில் கோழி மற்றும் முட்டை உற்பத்தி குறித்து, மத்திய அரசின் கால்நடை, பால் பண்ணை, மீன் வளர்ப்பு துறையின் வழிகாட்டுதலின் பேரில் ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வில், 2011-12ம் நிதியாண்டில், தமிழகத்தில் நாட்டுக் @காழிகள் மூலம், 40.20 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதர கோழிகள் மூலம், 1,145 கோடி முட்டைகள் உற்பத்தியாகி உள்ளன. ஒட்டு மொத்த முட்டை உற்பத்தி, முந்தைய நிதிஆண்டை விட, 2.94 சதவீதம் அதிகரித்துள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|